Sunday 28 May 2017

விழிப்புணர்வு


எத்தனை கடவுள்கள் எததனை மதங்கள்
இத்தனை இருந்தும் இயம்புவ தென்ன?
இயன்ற வரை பிறருக்காய் இயல்பாய் உதவிடு
வாழும்வரை கூட வருவோர் மனம்
வலிக்காமல் வாழ்ந்திடு
வந்தது ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை
வாழ்ந்த வாழ்க்கையை வாழ்த்தவேண்டும்
தலைமுறை, நம் பெயரை ஊர் சொல்லவேண்டும்
பலமுறை, உலகமே போற்ற வேண்டும்
ஏழுதல முறை.1!!

சாதிமதமில்லா சனத்தை படைப்பதும்
ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைப்பதும்
சாலையை கடக்க விழி இலாருக்கு வழிகாட்டவும்
பாலையை பண்படுத்தி பாங்காய் பயிர் இடவும்
உழவுத்தொழிலால் ஊரும் தழைத்திட வும்
களவுத் தொலின்றி கண்னியமாய் வாழ்ந்திடவும்

நோய் நொடிகள் இல்லா சமூகம் படைக்க
மாசில்லா தரணியில் கொசு இல்லாதிருந்தாலே
மானிடனை கொண்ட நோய் மாண்டு விடும் 
மறுகணமே,பிள்ளையின் பட்டு போன்ற பாதமது
சொட்டு சொட்டாய் மருந்திட்டால்
இளம் பிள்ளை  வாத மெனும் ஊனமிலா து
மனிதசனம்  படைத்திடலாம் ,

அவன் திட்டமிட்டு
படித்திட்டால் பின் நாளில் சோற்றுகு பஞ்சமில்லா
பெருவாழ்வு வாழ்ந்திடலாம் வளமுடனே!
காலை முதல் மாலை வரை கண்ணியம் மாறாது
கருத்தாய் இருந்திட்டால் இரவென்ன பகலென்ன
சாலை என்ன சோலை என்ன விதி என்ன வீதி என்ன
வீழ்ந்திடாது  வாழ்ந்திடலாம்,வீரநடை போட்டிடலாம்

விண்ணுலகையும் வென்றிடலாம் வெறியுடனே!

No comments: