பாட்டுக்கொருவன் பாரதி
பிறர்பாட்டுக்குள்ளும் ஒருவன் பாரதி
வீட்டுக்குள் அடிமைகொண்டவள்
வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான்
ஏட்டை தொட்டால் தீமை எனறநிலை மாற்றி
ஏட்டையும் பண் பாட்டையும்
பாடுதலாய் கண்டான்
மாட்டை கட்டியது போல்
தொழுவில் பார்த்தவளை
மாடு என்ற சொல்லே
செல்வம் என பொருள் கண்டான்
கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும்
பெண் பாடம் கற்பிப்பதாய்
கனவு கண்டான்காதலும்
சாதியும் பெண்டிற்கில்லை என்றவன்
காதலில் கனிந்து பெண்
காவியம் படைக்கக்கண்டான்
பட்டங்களையும்
பாடதிட்டங்களையும்
பயின்றதோடு சட்டங்களையும்
ஆணுக்கு சரியாக ஆழக்கண்டான்
விட்டத்தை பார்த்தே
விடலை பருவம் கழித்தவள்
திட்டம் போட்டு
வாழ்க்கையை திருத்திடக்கண்டான்
சுதந்திரக்கனவு சுந்தரமாய் பலித்தது
நிரந்தர கனவுகளும்
நிம்மதியாய் பலித்தது
பெண்ணுக்காய் கண்டகனா
புதுமை பெண்ணுக்காய்
அமைந்ததன்றோ! ! !
பிறர்பாட்டுக்குள்ளும் ஒருவன் பாரதி
வீட்டுக்குள் அடிமைகொண்டவள்
வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான்
ஏட்டை தொட்டால் தீமை எனறநிலை மாற்றி
ஏட்டையும் பண் பாட்டையும்
பாடுதலாய் கண்டான்
மாட்டை கட்டியது போல்
தொழுவில் பார்த்தவளை
மாடு என்ற சொல்லே
செல்வம் என பொருள் கண்டான்
கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும்
பெண் பாடம் கற்பிப்பதாய்
கனவு கண்டான்காதலும்
சாதியும் பெண்டிற்கில்லை என்றவன்
காதலில் கனிந்து பெண்
காவியம் படைக்கக்கண்டான்
பட்டங்களையும்
பாடதிட்டங்களையும்
பயின்றதோடு சட்டங்களையும்
ஆணுக்கு சரியாக ஆழக்கண்டான்
விட்டத்தை பார்த்தே
விடலை பருவம் கழித்தவள்
திட்டம் போட்டு
வாழ்க்கையை திருத்திடக்கண்டான்
சுதந்திரக்கனவு சுந்தரமாய் பலித்தது
நிரந்தர கனவுகளும்
நிம்மதியாய் பலித்தது
பெண்ணுக்காய் கண்டகனா
புதுமை பெண்ணுக்காய்
அமைந்ததன்றோ! ! !
No comments:
Post a Comment