Wednesday 7 May 2008

என்றும் நீ என்னோடுதான்

சொந்தங்களே சுமையானதுசோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது
கனிந்த காதல் கூடகசந்து போனது
நோய்களும் நொடிகளும்நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும் ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்சுருங்கியது போல்
மனித மனமும்சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களேநிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா? என்றால்
பத்தோடு பதினொன்றாய் வருமையும்
சொன்னது "என்றும் நீ என்னோடுதானென்று"

No comments: